சூடு தணிச்சு யோசிங்க, சிரிங்க !
முகமூடியின் இந்தப் பதிவை வாசித்து, Calgary சிவாவின் வேண்டுகோளுக்கு செவி மடுத்ததின் விளைவாக, விளைந்தது இந்த தமிழாக்கப் பதிவு ! ஆங்கில மூலத்திற்கு முகமூடியின் பதிவைப் பார்க்கவும் ! இப்படி லிங்க் தருவதன் மூலம் முகமூடிக்கும் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் இல்லையா ;-)
1. மெளனத்தை மேம்படுத்த வழியின்றிப் பேசாதே !
2. தவளைகள் தங்களை "BUG" செய்பவற்றை, எளிமையாகத் தின்று விடுகின்றன !
3. முட்டாள்தனம் ஒரு குறையல்ல ! வேறெங்காவது செல் !
4. சில நேரங்களில் நீ பூச்சி, சில நேரங்களில் நீ காற்றுத் தடுப்பான் (Windshield) !!!
5. உனக்கு உதவி செய்ய விருப்பம். எப்படி நீ உள்ளே நுழைந்தாய் ???
6. உன்னிடம் ஒன்று இருப்பதினாலேயே, அந்த ஒன்று இருப்பது போல் நீ நடந்து கொள்ளத் தேவையில்லை !
7. நான் "எவரும் இல்லை", அப்பழுக்கற்றவர் "எவரும் இல்லை", எனவே நான் அப்பழுக்கற்றவன் ! என்ன ஏதாவது புரியுதா :)
8. பாக்டீரியாவுக்கு ஆதரவு அளியுங்கள், சில மனிதர்கள் அதன் "Culture" க்கு மட்டுமே தகுதியானவர்கள் !
9. "எண்ணம்" என்று வரும்போது, சிலர் எங்கேயும், எதிலும் நிறுத்துவதில்லை !
10. அறிவுஜீவி: நீங்கள் மதிப்பு தராத பலப் பல விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்
11. "இல்லை" என்பதன் எந்தப் பகுதி உனக்கு விளங்கவில்லை ?
12. பன்றியுடன் மல்லுக் கட்டாதே ! நீங்கள் இருவருமே அசுத்தப்படுவீர்கள், ஆனால் பன்றிக்கு அதில் கொண்டாட்டமே :)
13. ஓரணியாக செயல்படுவது மிக அவசியம் -- இன்னொருவர் மேல் பழி போட அது அனுமதிப்பதால் !
14. சரியாக இலக்கை நோக்கிச் சுட வேண்டுமெனில், முதலில் சுடு, பின்னர் சுட்ட இடத்தை இலக்கு என்று கூறு !
15. நான் ஒரு நாளைக்கு ஒருவரை மட்டுமே மகிழ்விப்பேன். ஆனால், இன்று உன் நாளில்லை, நாளையும் தோதாகத் தோன்றவில்லை !!!
16. எலிப் பந்தயத்தில் (Rat-Race) பிரச்சினை என்னவென்றால், அதில் நீ வென்றாலும், நீ எலியாகவே கருதப்படுவாய் !
நன்றி: நண்பர் முகமூடி அவர்கள் !
என்றென்றும் அன்புடன்
பாலா
19 மறுமொழிகள்:
நண்பர்களுக்கு ஒரு செய்தி !
http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_14.html
மேலுள்ள முகமூடியின் பதிவை வாசித்த பின், "தமிழறிவில் விஞ்சி நிற்பது" பாலாவே என்பதை ஏற்றுக் கொள்பவர்கள், என் பதிவுக்கு '+' குத்தும், முகமூடி பதிவுக்கு '-' குத்தும் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் ;)
ஆனால், இப்பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள் வழங்கி, ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் மூன்று முறை பதில் பின்னூட்டம் என்னை போட வைத்து, பின்னூட்டக் கயமைத்தனம் செய்ய என்னை தூண்ட வேண்டாம் :) யார் "kilumathur" மகேந்திரனிடமும், "போலிஸிடமும்" வாங்கிக் கட்டிக் கொள்வது ????
//ஆனால், இப்பதிவுக்கு நிறைய பின்னூட்டங்கள் வழங்கி, ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் மூன்று முறை பதில் பின்னூட்டம் என்னை போட வைத்து, பின்னூட்டக் கயமைத்தனம் செய்ய என்னை தூண்ட வேண்டாம் :) யார் "kilumathur" மகேந்திரனிடமும், "போலிஸிடமும்" வாங்கிக் கட்டிக் கொள்வது ????//
அவ்ளோ லேசில விட்டுடுவமா என்ன?
நாமக்கல் சிபி அவர்களே,
நன்றி !
நாமக்கல் சிபி அவர்களே,
2-வது நன்றி !
நாமக்கல் சிபி அவர்களே,
3-வது நன்றி !
//அவ்ளோ லேசில விட்டுடுவமா என்ன?
//
ஒவ்வொரு பின்னுட்டத்திற்கும் மூன்று முறை பதில் பின்னூட்டம் என்னை போட வைத்து, பின்னூட்டக் கயமைத்தனம் செய்ய என்னை தூண்ட வேண்டாம் ;-)
//நாமக்கல் சிபி அவர்களே,
3-வது நன்றி !
//
அட! ஒரு பேச்சுக்குதான் சொல்றீருன்னு பார்த்தா உண்மையாவே அப்படியே செஞிப்புட்டீரே!
மூணு நன்றிக்கு திருப்பி நான் ஒரு நன்றியாவது சொல்லியாகணும்!
தமிழாக்கம் எல்லாம் சரிதான்!
ஆனால், இந்தப் 11வது பொன்மொழியில், 'னொ' என்பதற்கு, 'வேண்டாம், கூடாது' என்பதே பொருத்தமாக இருக்கும்!
நாலாவதில் சொற்பிழை இருக்கிறது. அதற்கு உங்களைக் குறை கூற முடியாது!
முகமூடியாரிடம் தான் செல்ல வேண்டும்!
நீங்கள் மொழிபெயர்த்தவர்தானே!
'பின்னூட்டக் கயமைப் போலீஸ்'தான் வர வேண்டுமா என்ன?
'பொருட்பிழைப் போலீஸ்' கூட வரும்!!
இதற்கும் 3 பின்னூட்டத்தில் மறுமொழி அளித்து, அவரையும் வரச் செய்யவும்!!
இங்கே இதுவரை இருக்கும் ஆறு பின்னூட்டங்களில் ஐந்தை பதிவரே போட்டிருக்கிறார் அதாவது தொன்னூறு சதவிகிதம் இது பற்றி கண்டும் காணாமல் போகும்படி பின்னூட்ட கயமை கண்காணிப்புக் குழு கையூட்டு பெற்றுவிட்டது என எனக்கு ஆதாரம் குவாட்டர் கோவிந்தன் மூலம் வந்திருக்கிறது. இதுகுறித்து மேல் முறையீடும் செய்யப் படும்
உளவாளி
பின்னூட்ட கயமை கண்காணிப்பு குழு..... :))))
SK,
சரியான நக்கீரனாக இருப்பீர் போலிருக்கிறதே, சொற்பிழை, பொருட்பிழையெல்லாம் சுட்டிக் காட்டிட்டு :)
நன்றி, நன்றி, நன்றி (3 தடவை ஒரே பின்னூட்டத்திலேயே முடிச்சுக்கறேன், ஐயா, ஏனெனில், மகேந்திரன் கண்காணிக்க ஆரம்பிச்சுட்டார் ;-))
நாமக்கல் சிபி,
வாங்க, நாலாவது நன்றி :)
மகேந்திரன்,
//
//
குவாட்டர் கோவிந்தனை குவாட்டர் வாங்கித் தந்து நேற்றைக்கே சரிக் கட்டியாச்சு :) ஐயா கண்டுக்காம இருக்க ஏதாவது சம்திங்க் ??? நன்றி !
CT,
என்ன, இப்படி 10 கமெண்ட் போட்டு என்னை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைச்சுட்டீங்க ?
//please don't hesitate to send me a cheque.Be generous, I will donate to blog police association....
//
இதெல்லாம் கொஞ்சம் ... :))))))))
Looks like you are a patriotic person seeing the Indian flag you have chosen for your Identity.
BTW, you can call me just 'BALA', no need for 'Bala Sir' !
--- BALA
Narasi,
I saw your and Idly's postings. In fact, I had commented in his posting too, as you can see !
But, I am not sure it can be classified as "plagiarism" as I am aware that this "Modern Algebra" thing has been in circulation in Emails. Pl. clarify if you are the owner/creator of this "modern algebra".
The only issue here is that of "propriety" as Idly has claimed that he found the stuff in his old Maths notebook. It is upto Idly to clear the air !!!
----enRenRum anbudan BALA
Where the hell is IDLYVADAI ???
பாலா,
நன்றி.
Anonymous,
வந்துட்டேன் :-)
அன்புடன்,
இட்லிவடை
இட்லிவடை,
நன்றி ! Hope Narasi must have cooled down now ;-)
என்றென்றும் அன்புடன்,
பாலா
Good translation :))
Post a Comment